Thursday 12 February 2015

ஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)


பயனக் கட்டுரை என்று தலைப்புக் கொடுத்திருந்தாலும் ,இந்தப் பதிவு புகைப்படங்களும் துனுக்குகளுமாகவே இடப்பட்டிருக்கிறது. முழுமையான பயணக்கட்டுரையாக எழுத ஆசை தான் ஆனா இந்தப் பதிவு இரண்டு வருடமாக டிராப்ட்-ல் இருந்து வருவதால் அப்படியே வெளியிட்டுவிட்டேன்.


கங்கராமையா டெம்பிள் கொழும்பு
புத்தவிகாரங்கள் தோறும் விநாயகர் சிலைகளைப் பார்க்கமுடிகிறது. மஹாவிஷ்னு மஹாலக்‌ஷ்மி படங்களை பெளத்தர்களின் வீடுகளிலும் கடைகளிலும் பார்க்க முடிகிறது. அவர்களுக்கு முருகனும் வழிபடும் தெய்வமே என்ன நமக்கு கந்தன் அவங்களுக்கு ஸ்கந்த.


மெளண்ட் லாவின்யா ஹோட்டல்-கொழும்பு
கடற்கரையை ஒட்டியபடி ரயில் ஓடுவது அழகோ அழகு. கொழும்புவில் இருந்து நுவரேலியா  செல்லும் வழிப்பாதையில் ரயிலில் செல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் பயணத்திட்ட நெருக்கடியால் இந்த முறை முடியவில்லை.




என் மகளும் மிஸஸ் கோமஸ் அவர்களும்
என்னுடன் பனிபுரிந்து தற்போது ஓய்வு பெற்று தற்போது ஸ்ரீலங்காவில் செட்டில் ஆகிவிட்டார். அன்பு என்றால் அதற்கு இவர் தான் அர்த்தம். எங்களுடன் கொழும்புவில் ரெண்டு நாட்கள் செலவிட்டார்.  அத்தனை பெரிய Dehiwala Zoo-ல்  63 வயதிலும்என் மகள் மீனாவைக் கூட்டிக் கொண்டு ஆர்வமாக அவளுடன் பேசிக் கொண்டே வந்தார். கொழும்புவிலிருந்து கண்டி செல்லப் புறப்பட்ட போது, என் மகள் பேசமால் இங்கயே இருக்கலாமில்ல என்றாள். போலித்தனம் இல்லாத அன்பு காட்டுபவர்களை பார்ப்பது அரிது மிஸஸ்.ஜி-யிடம் விடை பெறும் போது அனைவருக்குமே அத்தனை கஷ்டம்.






கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வைரமுத்து ஒரு பாடலில் ”கடல் வாசல் தெளிக்கும் வீடே” என்று எழுதியிருப்பார். கடல் அருகில் ரயில் செல்வதை இங்கே தான் பார்கிறேன். காலை நேர டிராபிக்-ஐ தவிர்க்க வெள்ளவத்த எனும் தமிழர் அதிகமிருக்கும் பகுதி வழியாக சென்றோம்.கொழும்புவிலிருந்து கண்டி செல்லும் வழி நெடுக ஸ்டாரபெரி கடைகள்.மீனாவின் வற்புறுத்தலால் ஒர் கடையில் நிறுத்தினோம். துபாயில் அரை டஜன் 14 திராம்-க்கு வாங்குவோம்.(இந்திய மதிப்பில் 225.) ஆனா கண்டி ரோட்டில் ரூ.50-க்கு அரைக்கிலோ கிடைத்தது. பசுமை பசுமை அது தவிர வேறு இல்லை. மரங்களுக்கு நடுவே கிராமங்களை ஒளித்து வைத்தது போல் அத்தனை அடர்த்தியாய் பரந்து விரிந்திருக்கிறன் மரங்கள்
















2 comments:

'பரிவை' சே.குமார் said...

பயணக்கட்டுரை படங்களுடன் அருமை.

Anonymous said...

Good pictures.