Saturday 17 January 2009

என் முதல் பதிவு

தமிழ் வலைப் பதிவுகளை நான் அவ்வப்போது படித்து வந்தாலும் ,வலைப் பதிவர்களின் சிறு பிள்ளைத்தனமான‌ போக்கு எனக்குப் பிடிப்பதில்லை. அதனாலேயே எனக்குப் பதிவுகள் இட வேண்டும் என்ற உந்துதல் இல்லாமலேயே இருந்தது.

வெகு ஜன ஊடகங்களில் நமது எழுத்து பல வேறு தரப் பரிசோதனைகளையும் அந்த பத்திரிக்கைகளின் விருப்பு வெறுப்பகளையும் கடந்து வரவேண்டும்.ஆனால் இங்கே ஒரே க்ளிக்‍-ல் நமது எழுத்தைக் கடைத் தெருவிற்கு கொண்டு வர முடியும். யார் வேண்டுமானாலும் எந்த விஷயத்தைப் பற்றி வேன்டுமானாலும் எழுதிவிட முடிகிறது. பெரும்பாலான பதிவர்கள் தங்களுக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்ற ரீதியில் திரிவதாகவே நான் உணர்கிறேன்.

டோன்டு சாரின் பதிவில் நாடி ஜோதிடத்தைப் பற்றி விவாதம் வந்த போது,இதைப் பற்றி கொஞ்சம் விரிவாக எழுதினால் என்ன என்று நினைத்ததின் விளைவு இன்று என்னையும் பதிவுகலகில் கால் பதிக்க வைத்திருகிறது.

விரைவில் நாடி ஜோதிடத்தைப் பற்றிய பதிவுடன் வருவேன்.

2 comments:

butterfly Surya said...

வாழ்த்துக்கள்..

ரிஷபன்Meena said...

வண்ணத்துப்பூச்சியார்:
நன்றி.