Thursday 27 May 2010

டம்பப் பை


பெரிய ஷாப்பிங்மால்களில் இருக்கும் கடைகளில் பிரமாண்டமான ஆடம்பரமான கடைகள் அணிவகுத்து இருக்கும்.  எதற்கு தான் இத்தனை செருப்பு, துணிக்கடைகள் என்று நினைக்க வைக்கும். நம்ம ஊர் ஜவுளிக்கடை அல்ல கடல் என்று விளம்பரப்படுத்தப் படும் கடைகள் போல் அல்லாமல் எத்தனை துணி இருக்கு என்று எண்ணி விடக் கூடிய வகையில் ரொம்ப கம்மியாக ஆனால் அழகாக டிஸ்ப்ளே ஆகி இருக்கும்.

விலையைக் கேட்டால் தலை சுற்றி விழ வைக்கும்.  லெதர் பேக் விற்கும் கடைகளில் எண்ணி பத்தே பத்து தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக டிஸ்ப்ளே ஆகி இருக்கும். இவைகளை யார் இத்தனை விலை கொடுத்து வங்குவது என்று நினைப்பேன்.


நேற்று எனக்கு வந்த ஈமெயில் இருந்த படங்களைப் பார்த்ததும் அத்தனை விலை கொடுப்பவர்களை பிடித்து உதைத்தால் என்ன என்றிருந்தது.

பிலிப்பைன்ஸ்-ல் இது உணவாகக் கூட இருக்காலாம் ஆனால் இப்படி கண்டபடி வேட்டையாடினால் எக்கலாஜிக்கல் பாலன்ஸ் தவறதானே செய்யும்.

எளிமையாய் இரு என்று நம் சித்தாந்தங்கள் சொல்வதன் அர்த்தம் இப்போதான் எனக்குப் புரிகிறது. ஆடம்பரங்களுக்குப் பின்னால் இத்தனை உயிர் சேதம் இருக்கிறது தானே.

புலித்தோலுக்கும் பாம்புத் தோலுக்கும் பணத்தை அழுகும் கயவர்கள் உள்ள வரை அதை வேட்டையாடுபவர்கள் இருக்கத் தான் செய்வார்கள்.





No comments: