Saturday 20 November 2010

தீபாவளி சில படங்கள்


Mankhool -Bank Street  பின்புறம்
சின்ன வயதில் தீபாவளி எத்தனை நாளில் வருது  வருது என்று எண்ணி எண்ணியே கை விரல் ரேகை தேய்ந்ததுண்டு.  ஒரு மாதத்திற்கு முன்பே தயாராக இருக்கும் புதுத் துணிகளை எடுப்பதும், வீட்டிற்கு வருபவர்களுக்கு காட்டுவதும் தனிப் பொழுது போக்கு தான். நிறைய அண்ணன்களுடன் கடைசி தம்பியாய் பிறந்ததால் வருடத்தில் ஒரு முறை தீபாவளிக்கு மட்டுமே புதிசு என்பதால் எனக்கு தீபாவளி ரொம்ப முக்கியமான பண்டிகையாவே இருந்தது. 


Spinney' s அருகில்
நாட்கள் ஏன் தான் இப்படி ஆமையாய் நகருகிறதோ என்று இருக்கும். ஒன்று ஒன்றாய் முளைக்கும் திடீர் பட்டாசுக் கடைகளுக்கு அடிக்கடி விசிட் செய்து நம்ம பட்ஜெட்-ல் எது எது அடங்கும் என்று பார்ப்பதே தனி சந்தோஷம் தான். சில வருடங்களில் டைலர் சொன்ன தேதியில் டிரஸ்-ஐ தராத  நேரங்களில் எனக்கிருந்த டென்சன் சொல்லி மாளாது .


அன்று நான் பட்ட கவலையை ஸ்பெக்ட்ரம் ஊழலில் பணம் அடித்தவர்கள் கூட
(எப்படி இவ்வளவு பணத்தையும் கடைசி வரை பாதுகாப்பது என்றுதான்) இன்று  பட்டிருக்கமாட்டார்கள். ஏண்டா பக்கத்தில் இருக்கும் ஆறுமுகம் டைலரிடம் கொடுன்னா கேட்காம டவுனில் கொண்டு கொடுத்தில்ல இனி அவன் உனக்கு பொங்கலுக்கு தான் கொடுக்கப் போறான் என்று என் அம்மா வேற வெறுப்பு ஏத்துவார்.  ஆறுமுகம் டைலர் எனும் தின்னை டெய்லரிடம் கொடுத்தெல்லாம் தைத்தால் அதை அதிகாரப்பூர்வ தீபாவளி சட்டை என்று ஒத்துக் கொள்ளமாட்டார்கள். சட்டையில் இரண்டு பாக்கெட் வைத்து அதன் ப்ளாப்பில் K.Tex என்ற லேபில் இல்லாவிட்டால், இது செல்லாது செல்லாது என்று நண்பர்கள் சொல்லிவிடும் அபாயம் இருந்தது.

கல்லூரி பருவத்தில் அத்தனை பரபரப்புடன் இல்லை என்றாலும்  டைலரின் லேபிலுக்கு முக்கியத்துவம் குறையாமலே இருந்தது.

மன்கூல் எரியா தான்
CA படிக்கும் போது, அது தீபாவளி பொங்கல் இரண்டையும் ஒரே கல்லில் அடித்துப் போட்டது . தீபாவளி சமயத்தில் பரிட்சை , பொங்கல் சமயத்தில் ரிசல்ட் என்பதே காரணம். டிரஸ் விஷயத்தில் காம்பரமைஸ் செய்து கொள்ளக் கூடிய அளவுக்கு மனது சரியானதும், இடையிடையே டிரஸ் எடுக்குமளவுக்கு  பர்சேசிங் பவர் வந்ததும் தீபாவளியை சாதரானமா கடந்து போகும் பண்டிகையாகவே மாற்றிவிட்டது. சிறுவயதில் அடைந்த பரவசமோ எதிர்பார்ப்போ இல்லாமல் இந்தப் பண்டிகைகளை கொண்டாடுகிறோமே என்ற குறை மனதை அழுத்த, அந்த நினைப்புடனேயே கொண்டாடி வந்தேன்.



துபாய் வந்ததும் அதுவும் கூட இல்லாமல் எதோ ஒரு வொர்கிங் டேவில் வந்து போக ஆரம்பித்தது. பாரம்பரியத்தை விட வேணாமே என அதி காலையில்  எண்ணைக் குளியல் செய்துவிட்டு செல்வதுடன் சரி. பட்டாசு  வெடிக்கத் தடை என்பதால் மற்றவர்கள் தீபாவளி கொண்டாடுகிறார்களா என்பது கூட தெரிய வராது.
ஆனால் கடந்த ஒரிரு வருடங்களாக ஒரு மாற்றம். என் வீட்டின் அருகே பல பில்டிங்களில் வண்ன விளக்குகளால் அலங்கரிக்க ஆரம்பித்து விட்டார்கள். நாளிதழ்கள் தீபாவளியை ரொம்ப நல்லா கவணிக்க ஆரம்பித்து விட்டது. பத்திரிக்கையை பிரித்தால் வங்கிகள் நகைக் கடைகள் டிபார்ட்மண்ட் ஸ்டோர்கள் என பலரின் தீபாவளி வாழ்த்து விளம்பரம் வருகிறது

சில வருடங்களாகவே பட்டாசு வெடிக்க ஆரம்பித்து விட்டார்கள். எங்கிருந்து வாங்கு வார்களோ தெரியாது.ஆனால் ராக்கெட், புஷ்வானம்,ஆயிரம்வாலா என வெளிப் படையாகவே அமர்களப் படுத்துகிறார்கள். துபாய் அரசு கொஞ்சம் லூசில் விட்டு இருப்பதாக உணர்ந்தாலும்,  கைப்புள்ளைய விட பயந்தவன்  என்பதால் நான் பட்டாசை தேடிப் போகவில்லை.


எனது வீட்டின் அருகே உள்ள சில பில்டிங்-ன் மின் விளக்கு அலங்காரங்களைப் போட்டோ எடுத்தேன்.அதைத் தான் இங்கே பார்கிறீர்கள்.தீபாவளிக்கு பத்து நாட்கள் முன்னதாகவே இவை தொடங்குவதால், எனக்குள் மீண்டும் தீபாவளி பற்றி பரபரப்பு தொற்ற ஆரம்பித்து விட்டது.  இந்தியாவில் பட்டுப்பாவடை வாங்கும் போது தீபாவளிக்கு என்று சொல்லி சொல்லி  என் மகளும் தீபாவளி பற்றி எதிர்பார்க்க ஆரம்பித்தாள். மீண்டும் 
தீபாவளியை எதிர்பார்த்து கொண்டாட ஆரம்பித்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.








நிறைய படம் எடுத்துட்டேன்  அதான் இந்த பதிவு.


4 comments:

Unknown said...

படம் எடுத்ததற்காக பதிவா? பார்ர்ர்ர்ரா! :-)

ரிஷபன்Meena said...

ஜீ ,

வருகைக்கு நன்றி.

ரொம்ப நாளா பதிவே போடல... அதன் வெறும் போட்டாவையே ஒரு பதிவாக்கிட்டேன்.

THOPPITHOPPI said...

சில படங்கள் இருட்டில் இருப்பதால் உங்களுக்கு மட்டுமே வெளிச்சம். பொங்கலுக்கு வெளிச்சத்துல எடுக்க ட்ரை பண்ணுங்க

ரிஷபன்Meena said...

//சில படங்கள் இருட்டில் இருப்பதால் உங்களுக்கு மட்டுமே வெளிச்சம். பொங்கலுக்கு வெளிச்சத்துல எடுக்க ட்ரை பண்ணுங்க//

தொப்பி சார்,

நல்ல நகைச்சுவை வெகுவாக ரசித்தேன்.

வருகைக்கு நன்றி.