Monday 20 December 2010

Flower Power- ‘Dutch Auction’

Perishable goods என்ற வகையில் வரும், பறித்த சில மணி நேரத்திலேயே வாடிவிடக் கூடிய பூக்களை எப்படி தான் இப்படி மெருகு குழையாமல் துபாய் கொண்டு வந்து விற்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும். இங்கே வரும் பூக்கள் பெரும்பாலும் ஹாலந்தில் இருந்து தான் வருகின்றன. இத் துறையில் இருக்கும் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது நிறைய விஷயங்கள் எனக்கு இண்ட்ரஸ்டிங்காப் பட்டது




வியாபரிகளிடம் பூக்களை விற்கும் போது சரியான விலை கிடைக்காததை கண்ட பூக்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் கூட்டாக சேர்ந்து உருவாக்கிய அமைப்பு தான் ப்ளோரா ஹாலந்து. இது ஒரு கோப்ரேட்டிவ் சோசைட்டி, உறுப்பினர்களுக்காக லாப நோக்கின்றி இன்று வரை சிறப்பாக இயங்கி வருகிறது.உலகின் 60சதவிகித பூக்களின் வர்த்தகம் இதன் மூலமே நடக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் 20 மில்லியன் பூக்கள் தங்கள் உரிமையாளர்களை “ப்ளேரா ஹாலந்து”-ல் சத்தமில்லாமல் மாற்றிக் கொள்கின்றன தெரியுமா ? இது தினம் தினம் திரும்ப நடக்கிற ஒரு நிகழ்வு. post harvest management -ம் ”சப்ளை செயின் மேனெஜ்மெண்ட்” திறம்பட இருப்பதே இதன் வெற்றியை உறுதி செய்கிறது.

ஏலம் விடும் முறையில் புதுமை

தினம் தினம் நடக்கும் ஏலத்திலும் ஒரு புதுமை இருக்கிறது. இங்கே ஒரு தரம் இரண்டு தரம் என்று கூவுகிற பிசினஸ் எல்லாம் கிடையாது. இந்த ஏல முறையை ஆக்‌சன் க்ளாக் என்கிறார்கள். அதிக பட்ச விலையில் க்ளாக் ஒடத் துவங்கும் எந்த விலை வர்த்தகருக்கு ஒ.கே யோ அந்த விலையில் க்ளாக்கை நிறுத்துவார், அதிக பட்ச விலையிலிருந்து ஆரம்பித்து குறைந்து கொண்டே வரும், எந்த விலை வர்த்தகருக்கு சரியானதாக தெரிகிறதோ அப்போது பஸ்சரை அழுத்த அந்த ”லாட்” அந்த விலையில் அவருக்கு வழங்கப்படும். ஒரு நாளைக்கு 39 ஆக்சன் க்ளாகுகள் இயங்கும். டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனதைத் தொடர்ந்து இந்தக் க்ளாக்குகளில்  இண்டெர்னெட் மூலமும் பங்கு பெற முடியும். ஏலம் முடிந்த 1 மணி நேரத்திற்குள் பூக்களை டெலிவரி செய்துவிடுவார்களாம்.

தரம் நிரந்தரம்
ஏலத்திற்கு பூக்களின் போட்டோக்களை திரையில் காட்டுவார்கள் கூடவே அந்தப் பூ சப்ளையரின் BI index- ம் டிஸ்ப்ளே ஆகுமாம்.

ஆமா அது என்ன index ?

ஃப்ளோரவின் வழிகாட்டுதல்களின் படி பூக்கள் வளர்க்கப்பட்டு சரியான முறையில் பாக்கிங் செய்யப்பட்டு  இருக்க வேண்டும். அந்த வழிகாட்டுதலை பூ சப்ளையர் பின்பற்றும் லெவலுக்கு ஏற்ப  BI index எண்கள் அந்த சப்ளையருக்கு வழங்கப்படும். அந்தப் பூக்காரர் வொர்த்தா இல்லையா என்று இந்த  BI index  சொல்லிவிடும். இந்த  BI index  என்பது நிரந்தரமாக இருப்பது சப்ளையர் கையில் தான் இருக்கிறது. தரமற்ற பூக்களை சந்தைக்கு கொண்டுவந்தால் அவரின் index-தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் குறைக்கப்படும். இந்த BI (reliability index) -ஐ பொறுத்தே அந்த பூக்களுக்கு விலையும் என்பதால் தரம் நிரந்தரமாக பேனப்படுகிறது

ப்ளோரா ஹாலந்து -ன் தலமையகம் ஆல்ஸ்மீரில் இருக்கிறது. 990,000 சதுரடியில் உள்ள இந்தக் கட்டிடத்துக்கு உலகின் மூன்றாவது பெரிய கட்டிடம் என்ற பெருமையும் உள்ளது. நாள் ஒன்றுக்கு இங்கே 20 மில்லியன் பூக்களை விற்கிறார்கள். உலகின் 60 சதவிகித பூ வர்த்தகம் இங்கே தான் நடக்கிறது. ஹாலந்தில் விளையும் பூக்களுக்காக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் காலப்போக்கில் கென்யா, ஈக்வேடார், எத்தியோப்பியா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிலிருந்து வரும் இருந்து பூக்களை பெற்று சந்தைப் படுத்தவும் செய்கிறது.


இந்த மாதிரி ஏலம் பூக்களை வாங்குபவர்களுக்கு அவர்கள் டிமாண்ட்டுக்கு தகுந்த விலையில் பூக்கள் கிடைக்க ஏதுவாக இருக்கிறது. உதாரணத்துக்கு மதுரையில் சித்திரை திருவிழா சமயத்தில் அதிகமான கூட்டம் கூடுவதால் பூக்களுக்கு மிக அதிக டிமாண்ட் இருக்கும் அப்போ மதுரை வர்த்தகர் அதிக விலையில் அந்த ”லாட்”ஐ எடுக்கலாம். வேற ஊர் வர்த்தகருக்கு அந்த டிமாண்ட் இல்லாதிருப்பதால் அந்த க்ளாக்-ல் மதுரைக்கு வழிவிட்டு ஒதுங்கிவிடுவார். அடுத்த க்ளாக்களில் அவர்களுக்கு தகுந்த விலையில் பெறுகிறார்கள். இந்த முறையினால் விளைவிப்பவர்களுக்கு சரியான விலை கிடைத்து விடுகிறது. நம்ம ஊர் மாதிரி விவாசாயம் செய்யும் சாதாரான ஆட்கள் வர்த்தகர்களிடம் போராட வேண்டிய நிலை அங்கில்லை. நம்ம ஊரில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அது இது என்று கண்ணில் தெரிந்தாலும் சாதரான விவசாயியின் நிலையில் எதுவும் முன்னேற்றமே இல்லாததால் அவை சிறப்பாக நடை பெறவில்லையோ என்ற சந்தேகமே எனக்கு இருக்கிறது.




லோக்கல் டெலிவரி என்றால் ஒரு மணி நேரத்திலும், வெளிநாடுகள் என்றால் அதிகபட்சமா 24 மணிநேரத்திலும் டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் செய்யப்பட்ட கண்டெய்னர்களில் அனுப்புகிறார்கள்.குறிப்பிட்ட நேரத்தில் பூக்கள் வந்து சேர்வதில் தான் இந்த வர்த்தகத்தின் வெற்றியே இருப்பதால் போஸ்ட் ஹார்வஸ்ட் மேனேஜ்மெண்ட்-ல் அதிக கவனம் செலுத்துவதால் வரையறுக்கப்பட்ட முறையில் பாக்கிங் செய்யப்பட்டு கொஞ்சம் கூட வாடாமல் வதங்கமால் பயணாளரை சென்று அடைகிறது.



ஆனால் இதிலும் பிரச்சனை இல்லாமல் இல்லை. வளர்ந்த நாடு என்பதால் நிலத்தின் விலை பண்மடங்காக இருப்பதாலும், தொழிலாளர் ஊதியம் அதிகமாக இருப்பதாலும்,அதிகமான மார்டனைஷேசனாலும் அதன் உற்பத்தி செலவு அதிகமாகி இருக்கிறது. ஆகையால் ஐரோப்பாவை தாண்டி ஹாலந்து ப்ளவர்களுக்கு தற்போது மவுசு குறைந்து போயிருக்கிறது.


நம்ம நாட்டில் பல நல்ல பூ, கனி வகைகள் உண்டு, அதை இது போல் சந்தைப் படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும். விளை நிலங்களை ரியல் எஸ்டேட்டாக மாற்றாமல் விவசாயிகளுக்கு உன்மையான ஊக்கமும் வழிகாட்டுதலும் இருந்தால் நம் விவசாயிகள் நிலை உயர்வதோடு தேர்தல் நேரங்களில் அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டியும் வராது.

மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் இந்த லிங்க்-ல் பார்க்கலாம்.

http://www.floriculturetoday.in/Horticulture-offers-win-win-situation-for-Indo-Dutch-Cooperation.html

படங்கள்: நன்றி Flora Holland.com

No comments: