Tuesday 29 June 2010

சென்செக்ஸ் எப்படி கணக்கிடப்படுகிறது

ஒரே நாளில் சென்செக்ஸ் 600 பாயிண்ட்கள் சரிந்தது என்றெல்லாம் நியூஸ்-ல் கேட்டு இருப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் ஈடுபாடு இருக்கிறதோ இல்லையோ சென்செக்ஸ் என்கிற வார்த்தையை ஒரு நாளில் ஒரு முறையேனும் நீங்கள் கேட்காமல் இருக்க முடியாது. இந்தக் குறியீடு பங்கு சந்தையின் நிலையை அறியும் தெர்மா மீட்டர் என்று எல்லோருக்கும் தெரியும் ஆனால் அதை எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தெரிய வாய்பில்லை. அதை விளக்கவே இந்தப் பதிவு.



1986 வருடம் தான் முதல் முதல் 1978-79 -ஐ base year (100 பாயிண்ட்ஸ்) ஆக வைத்து இந்த index கணக்கிடப்பட்டது. அதற்கு முன்பு வரை இந்திய பங்கு சந்தை ஏற்ற இறக்கத்தைக் குறிக்க எந்தக் குறியீடும் இல்லாமல் தான் இருந்தது.

இந்த சென்செக்ஸ் , BSE-ல் லிஸ்ட் செய்யப்பட்ட தரமான 30 பல்வேறு துறைகளின் விலை ஏற்ற இறக்கத்தை வைத்து, Free Float Market Capitalisation முறையில் கணக்கிடப்படுகிறது. ( குறிப்பு: இந்த கணக்கிடும் முறை மாற்றத்திற்கு உட்பட்டது, இப்போதைய முறை 2003-ல் வருடத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது 1986 -2003 வரை Full Market Capitalisation வழக்கத்தில் இருந்தது )


ஆமா அது என்ன Free Float Market Capitalisation ? முதலில் Market Capitalisation என்றால் என்ன என்று பார்போம்.

அந்தக் கம்பெனி வெளியுட்டுள்ள ஷேர்களின் தற்போதைய மார்கெட் மதிப்பே மர்கெட் காப்பிடலைஸேஷேன் என்றழைக்கப்படுகிறது.

உதாரணத்துக்கு KSB Pumps- வெளியிட்டுள்ள மொத்த ஷேர்கள் 1.7403 cores (Issued Capital) ஒரு ஷேரின் மார்கெட் மதிப்பு Rs.490

KSB Pumps-ன் மார்கெட் காபிடலைஸேஷன் = 1.7403 x Rs.490 = 852.79 Crores

( No.of Outstanding Shares multiplied by the market value of the Share)

இந்த "Mrkt.Cap"-மதிப்பை வைத்தே அவை லார்ஜ் கேப், மிட்-கேப் மற்றும் ஸ்மால் கேப் என்றெல்லாம் வகைப் படுத்தப்படுகின்றன.

ஆனால் ஒரு கம்பெனி வெளியிட்டுள்ள அத்தனை ஷேர்களும் ஒப்பன் மார்கெட்டில் டிரேட் ஆகிக் கொண்டிருக்காது. ப்ரோமோட்டர்கள் நிர்வாகிகள் வசம் இருக்கும் "controlling interest" ஷேர்கள் சில, FDI- கள் (Foreign Direct Investors)வசம் சில , அரசாங்கத்தின் கையில் (Promoter/acquirer)என்று இருப்பவை தவிர்த்து மார்கெட்டில் எல்லோராலும் தடையின்றி வாங்கி விற்கப்படும் ஷேர்களே அந்தக் கம்பெனியின் ஃப்ரீ ப்லோட். இதன் மார்கெட் மதிப்பே ஃப்ரீப்லோட் மார்கெட் காப்பிடல் ஆகும்.( இதை சதவிகிதமா சொல்லும் போது அது free float factor எனப்படும்).
இப்ப நமக்கு பேஸிக் டெர்மினாலாஜி எல்லாம் தெரிஞ்சாச்சு , இனி எப்படி சென்செக்ஸ்- கணக்கிடுவதென்று பார்க்கலாம்

1. இந்த கணக்கீட்டுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் 30 ஷேர்களின் Free Float Market Cap-ஐ கண்டுபிடிக்கனும்.

2.Free Float Market Cap-அத்தனையையும் கூட்ட வேண்டும்

3 அந்தக் கூட்டுத் தொகையை base year (1978-79 base value=100 சென்செக்ஸ் பாயிண்ட்ஸ்)-க்கு ஒப்பிடக்கூடிய வகையில் சமன் படுத்துவதே சென்செக்ஸ் மதிப்பீடு ஆகும் இந்த மூன்றாவது கொஞ்சம் புரியாதது போல இருக்கும். இது எப்படி என்பதை கடைசியில் பார்போம். இனி சென்செக்ஸ்


30 கம்பெனிகளின் நேற்றைய Free Float Market Cap = 320000கோடிகள் நேற்றைய சென்செக்ஸ் = 16000 பாயிண்ட்கள்

30 கம்பெனிகளின் இன்றைய Free Float Market Cap = 336000 கோடிகள் என்றால் இன்றைய சென்செக்ஸ் குறியீடு எவ்வளவு

நேற்று நிலவரப்படி 20 கோடிக்கு ஒரு பாயிண்ட் என்றால் இன்றைக்கு எத்தனை பாயிண்ட்

320000/16000 =20 ( இதற்கு index divisor என்று பெயர்)

336000/20 =16800 பாயிண்ட்கள்

Base year ( 1978-79 base value=100 சென்செக்ஸ் பாயிண்ட்ஸ்)-க்கு ஒப்பிடக்கூடிய வகையில் சமன் படுத்துவது ஏன்றால் என்ன ?ஒரு சின்ன உதாரனத்தை வச்சுக்கிட்டு பார்த்தா கொஞ்சம் புரியும்
1978-79 ஆம் வருடம் மார்ச் 31ம் தேதி மாலை டிரேடிங் முடிந்ததும், 30கம்பெனிகளின் Free Float Market Cap ரூ 60,000 என்று வைத்துக் கொண்டு அன்றைய தினத்தின் சென்செக்ஸ் 100 என்று குறித்திருந்தோமேயானால் அந்தக் கம்பெனிகளின் 1986-ம் வருட Free Float Market Cap =840,000 என்றால் 1986-ல் இந்தக் கம்பெனிகளின் சென்செக்ஸ் கீழ்கண்டவாறு கணக்கிட்டு இருப்பார்கள்

60000/100 =600 (index divisor )

1986-ம் வருட Free Float Market Cap =840,000 /600 =1400 பாயிண்ட்ஸ்

ஒவ்வொரு நாளுக்கும் Free Float Market Cap கணக்கிடப்பட்டு index divisor (Index divisor = Previous F.F.M.Cap/ Previous Sensex point) ஆல் வகுக்க புதிய சென்செக்ஸ் கிடைக்கிறது. இந்த 1400 தான் இப்படி 16800 பாயிண்ட்களாக வளர்ந்து நிற்கிறது.


அதெல்லாம் சரி எப்படி அந்த 30 ஷேர்களை தேர்வு செய்கிறார்கள்?
என்ன என்ன கம்பெனி ஷேர்கள் அதில் இடம் பிடித்திருக்கிறது என்பது பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

மேலதிக விபரங்கள் தெரிய http://www.bseindia.com/ வலைத்தளத்தில் அறியலாம்.













தயவு செய்து அமைதி காக்கவும்





சென்ற நவம்பர் இறுதியில்  குழந்தைகள் தினந்தன்று  ஏற்பாடு செய்யப்  பட்டிருந்த  குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தேன்.

குழந்தைகள் அத்தனை பேரும் கலக்கினார்கள்.  நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்கள் performance ஆரம்பித்து விடுகிறது. சற்றே இல்லை!! இல்லை!! நிறையவே வசதிக் குறைவாக இருக்கும் காஸ்ட்யூம்-களை அனிந்து கொண்டு, அது கசங்கமால் அதுகள் பார்த்துக் கொள்வதே தனி அழகு. ரொம்ப பேசினால் லிப்ஸ்டிக் அழிந்து விடுமே என்று பேசுவதேயே தவிர்த்த அவர்கள் அர்பனிப்பு உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது.


என் மகள் மீனா வெள்ளைக் கொடி வேந்தன் வேடத்தில் வந்திருந்தாள்.

”சண்டை போடமாட்டேன்” என்பது தான் அவள் மேடை ஏறி சொல்ல வேண்டிய டயலாக்.

அத்தனை பொறுமையாக  அவள் மேக்கப் செய்து கொண்டது ஆச்சர்யமாக இருந்தது. அந்த நேரம் பார்த்து கூட்டத்தில் பிறந்த நாளுக்கு யாரோ சாக்லேட் வழங்க, அடடா இப்ப சாக்லேட் சாப்பிட ஆரம்பிச்சா எல்லா மேக்கப்-ம் போய்ட போகுதே என்று நாங்கள் பயப்பட,     ”சண்டை போடமாட்டேன்” சொல்லிட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன் என்று எங்களை ஆச்சர்யப் படுத்தினாள். அவள் வலது கையில் வைத்திருப்பது சாக்லேட், போட்டோவில் பார்க்கலாம்.

நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரம் இருந்ததால் நான் சில படங்கள் எடுத்தேன்.
ஆமா ஆமா ராஜா சிரிச்சா இப்படி தான் சிரிப்பாரு.


குழந்தைகள் அரும்பாடு பட்டு வசனங்களை ஏற்ற இறக்கத்துடன் பேசி பிரமாதப் படுத்தினார்கள். சில குழந்தைகள் டான்ஸ் , கீ போர்ட் என்று கலக்கினார்கள். மேனி முழுதும் கலர் பூசி மீனாட்சி, கிருஷ்ணர்,  அர்த்தனாரீஸ்வரர் என்று பிரமாதப்பத்தினார்கள். குருக்கள் வேடமணிந்த குழந்தைக்கு இதற்காகவே மொட்டை போட்டு, கொஞ்சூண்டு முடியை விட்டுவைத்து  குடுமியாக்கி இருந்தார்கள்

ஆனால் ஆடியன்ஸ் அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் பேசிக் கொண்டே இருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தயவுசெய்து அமைதிகாக்கவும் என்று எத்தனையோ முறை மைக்-கினார்கள். கொழந்தங்க நிகழ்ச்சி நடக்குது இந்தாளு எதுக்கு தான் இப்படி காத்துகிறாறோ என்பது போல் பார்த்துவிட்டு, விட்ட இடத்திலிருந்து பேசிக் கொண்டுதான் இருந்தார்கள்.

சென்ற நவம்பரில் நடந்ததை இப்போது நான் எழுதுவதற்க்கு காரணம், சமீபத்தில் நான் படித்த ஒரு பதிவு.

Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: CTA 2010 ஆண்டு விழாவும் இங்கிதம் தெரியா டமில் தேசிகளும் என்ற இந்தப் பதிவைப் படித்த போது தான் தமிழ் ஆடியன்ஸ் எந்த நாட்டில் இருந்தாலும் இப்படி தான் என்று தெரிந்தது. .

Surveysan-ல் பதிவிலிருந்து சில பகுதிகள் blue கலரில்

 அரங்கத்தை விட்டு எழுந்து போய் பேசிட்டு வரணுங்கர இங்கிதம், எம்புட்டு படிச்சும், இம்புட்டு தூரம் வந்தும், நம்ம மக்களுக்கு இல்லாம போனது ரொம்பவே பெரிய சோகம்.ஆனா, ரொம்ப படித்தவர்களின், இயல்பே இதுதானான்னு கேட்டீங்கன்னா, அதுதான் இல்லை. இதே மக்கள், ஒரு அமெரிக்க நிகழ்ச்சிக்கோ, ஆங்கில சினிமா தியேட்டருக்கு, வேற ஏதாவது ஒரு கண்றாவிக்கோ போனா, தொரை மாதிரி வாய்ல வெரல வச்சுக்கிட்டு ஒக்காருவாங்க. இது என்ன உளவியல் காரணமோ தெரியல. தேசிகள் ஒன்று பட்டால், எருமைக் கூட்டம் மாதிரி ஆயிடறோம். தனி மனித சுய டிஜிப்ளின் கொஞ்சம் கூட இல்லாத கூட்டம் நம்ம கூட்டம்!ஹ்ம்!//

தமிழர்கள் மட்டும் தான் இப்படி இருக்கிறார்களா இல்லை மற்ற இந்தியர்களும் இப்படி தானா என்று தெரியவில்லை.தமிழர்கள் எங்கு கூடினாலும் பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். மேடையில் என்ன நிகழ்ச்சி நடந்தாலும் கவலைப் படாது அவர்கள் பாட்டுக்கு பேசிக் கொண்டே இருப்பார்கள். நான் கூட நம்ம குரூப் தான் இப்படி பேசிக் கொண்டே இருக்கிறது என்று ஏக வருத்ததில் இருந்தேன், ஆனால் சர்வேசனின் மேற்கண்ட பதிவைப் படித்ததும் தமிழர்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இப்படி தான் இருப்பார்கள் என்று அறிந்த போது சற்று நிம்மதியடைந்தேன். (நான் பெயில் என்ற சோகம் என் நண்பனும் பெயில் தான் என்று அறிந்த போது மகிழ்ச்சியாய் மாறியது என்பார்களே அது போல)

 மற்ற தேசத்தவர்களும் கூட்டம் நடத்துகிறார்கள். அவர்களிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. நெட்வொர்கிங்-காக ஒதுக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரத்தில் அமைதிக்காக்கிறார்கள். மேடையில் நடக்கும் நிகழ்ச்சிக்கு அத்தனை மரியாதை கொடுப்பார்கள். சைலன்ஸ் ப்ளீஸ் என்றெல்லாம் அங்கே யாரும் கத்திக் கொண்டிருக்கவில்லை ஏன்று திருந்துமோ நம் தமிழ் கூறும் நல்லுலகம்.

அந்த பதிவின் கமென்ட்ஸ்-பகுதியில் (பின்னூட்டம் தான் -என் நண்பர்கள் பலர் தமிழ் வலைக்கு புதுசு)  தமிழ் பிரியன்  என்ற நண்பர் ஒரு யோசனை தெரிவித்திருந்தார். சபையில் ஆங்காங்கே வால்ண்டியர்ஸை நிறுத்தி  வைத்து எந்தப் பகுதியில் சத்தம் வருதோ, அந்த வாலண்டியரைப் பார்த்து சத்தம் போடலாம் என்று சொல்லியிருந்தார்.

எனக்கு தோண்றிய சில வழிமுறைகள்.

ஆனால் இதற்கும் ஆடியன்ஸ் ஒத்துழைப்பு இருந்தால் தான் முடியும். ஸ்போர்டீவ்வாக எடுத்துக் கொள்ளக் கூடிய ஆடியன்ஸ்களிடம் மட்டுமே இவற்றை செயல்படுத்த முடியும்


  •  பேசிக் கொண்டிருப்பவர்கள் பெயர்களைச் சொல்லி அவர்களுக்கு ஒரு ”ஓ” போட சொல்லலாம்.

  • ரொம்ப அரட்டையில் இருக்கிற குரூப்-ஐ செலக்ட் செய்து மேடைக்கு வரவைத்து ரூ.10 பரிசு தரலாம்.

  • அப்பவும் அடங்கவில்லை என்றால் அடுத்த ”பேசுகிற” குரூப்பை செலக்ட் செய்து மேடைக்கு அழைத்து,  பாடவோ ஆடவோ சொல்லலாம்.
 இவை எல்லாவற்றுக்கும் மேலே ரொம்ப டெரரான ஒரு ஐடியா இருக்கு
உளியின் ஓசை, சுறா, பெண்சிங்கம்னு என்று எதாவது ஒரு  படத்தை திரையிட்டு அமைதி ஏற்படுத்தாலாம். (ஆனால்,எல்லோரும் அரங்கை விட்டு வெளியேறி விடும் ஒரு ரிஸ்க் இதில் இருக்கு.)








Monday 14 June 2010

முயல் ஆமை வால்ட் டிஸ்னி வெர்சன்

மராட்டிய மன்னன் சிவாஜி அம்மா சொன்ன வீரக் கதைகளைக் கேட்டு வளர்ந்தால் தான் பின்னாளில் வீரசிவாஜியாக முடிந்தது. சின்ன வயதில் நிறைய வீரக் கதைகள் கேட்காததால் தானோ என்னவோ நான் ரொம்ப சாதுவாகவே வளர்ந்துவிட்டேன். குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி சிறுவயதில் தன் தந்தையை இழந்த போதிலும்,அம்மா சொல்லிய கதை கேட்டு வளர்ந்ததால் வாசிப்பில் தனக்கு ஈடுபாடு வந்ததாக ஒரு முறை சொல்லியிருந்தார்.

ஆக கதைகள் குழந்தைகள் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது உனமை. அதனால் என் மகளுக்கு ஒன்றரை வயதிலேயே நான் கதை சொல்ல ஆரம்பித்து விட்டேன்.அவள் கவனிக்கிறாளோ இல்லையோ  கடனே என்று அவள் தூங்கும் வரை கதை சொல்வது வழக்கம்.


இப்போது மூண்று வயதாகிறது. இரண்டு வயதிலிருந்து கொஞ்சம் கவனிக்க ஆரம்பித்து இப்போது பாட்டி வடை சுட்ட கதையை பல variation-களில் திருப்பி சொல்ல ஆரம்பித்திருக்கிறாள். சில சமயம் காக்காய்க்கு பாட்டியே வடையைக் கொடுப்பதாக வரும் சில நேரங்களில் வடைக்கு பதில் சாக்லேட் வரும், நரிக்கு பதில் குரங்கு இப்படி எதேனும் மாறுதல்களுடன் சொல்லுவாள்.

சமீபத்தில் முயலும் ஆமையும் கதை சொன்னேன். என்னதான் ஆமை, முயல் படங்களை பார்த்திருந்தாலும் முயல் வேகமா போகும் ஆமை ஸ்லோவா போகும் என்றால் அவளுக்கு விளங்கவில்லை. சரி யூடுயூப்-ல் பார்க்கலாம் என்று தேடிய போது Walt Disney Studios-ன் இந்த அற்புதமான படம் கிடைத்தது.

சில  இந்திய அனிமேஷன் படங்கள் ரொம்ப தூரபையாய் இருக்கின்றன. நாம் அனிமேஷனுக்கு அவ்வளவு செலவு செய்வதில்லையா என்று தெரியவில்லை.

மனிரத்தினம், ஷங்கர் மற்றும் பாரதிராஜா போன்ற டைரக்டர்கள் படங்கள் மட்டுமல்லாது பாடல்காட்சிகள் கூட அவர்களுடைய தனிபானியில் இருக்கும்,அது போல கார்டூன் படங்களில் வால்ட் டிஸ்னி-யின் பானியே தனிதான். அவர்களின் கிரியேட்டிவிட்டியைப் பாராட்டாமல் இருக்க முடியாது ஒரு சாதாரன முயல் ஆமைக் கதையை இவர்களைப் போல் விறுவிறுப்பாய் நகைச்சுவையாய் வேறு யாராலும் எடுக்க முடியுமா தெரியாது.

.